திருமணத்துக்கு சில மணி நேரம் முன்பு ராணுவ வீரர் சுட்டுக்கொலை…!!

Read Time:1 Minute, 10 Second

201611261253489585_soldier-shot-dead-a-few-hours-before-wedding_secvpfஉத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியை சேர்ந்தவர் அவினாஸ் ரஸ்தோகி (வயது 28). எல்லை பாதுகாப்பு படை வீரர்.

இவருக்கு நேற்று மாலை திருமணம் நடப்பதாக இருந்தது. அவர் தனது தந்தையின் வளர்ப்பு மகனான விகாஷ் என்பவரின் மனைவியின் தங்கையை திருமணம் செய்ய இருந்தார்.

ஆனால், இந்த திருமணம் நடப்பதை விகாஸ் விரும்பவில்லை. இது தொடர்பாக அவினாஸ் ரஸ்தோகி- விகாஸ் இடையே தகராறு இருந்து வந்தது.

நேற்று மதியம் இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது விகாஸ் கைத்துப்பாக்கியால் அவினாஸ் ரஸ்தோகியை சுட்டார். இதில், அந்த இடத்திலேயே அவர் உயிர் இழந்தார்.

திருமணம் நடக்க இருந்த சில மணி நேரத்துக்கு முன்பாக அவர் சுட்டு கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விகாசை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனா, தஜிகிஸ்தான் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்…!!
Next post 30 வயதுக்கு மேல் உடலில் ஏற்படும் மாற்றங்கள்…!!