சுவற்றை உடைத்துக்கொண்டு ஏரியில் பாய்ந்த கார்: இளம்பெண் உள்பட இருவர் பலி…!!

Read Time:1 Minute, 55 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-4சுவிட்சர்லாந்து நாட்டில் தடுப்புச்சுவற்றை உடைத்துக்கொண்டு கார் ஒன்று ஏரியில் விழுந்த விபத்தில் இளம்பெண் உள்பட இருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் டிசினோ மாகாணத்தில் உள்ள Lugano என்ற நகரில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் 23 வயதான நபர் மற்றும் 19 வயதான இளம்பெண் ஆகிய இருவரும் காரில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், கார் Castagnola என்ற பகுதியில் சென்றபோது திடீரென தடுப்புச்சுவற்றை உடைத்துக்கொண்டு ஏரியில் பாய்ந்துள்ளது.

காரில் சிக்கியவர்கள் தப்பி வெளியேற முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

பின்னர், ராட்சத கிரேன் உதவியுடன் கார் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. காருக்குள் இருந்த இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

சடலங்களை மீட்ட பொலிசார் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இளம்பெண் ரஷ்யா நாட்டை சேர்ந்த ஒரு பெரும் தொழிலதிபரின் பேத்தி என்றும், உயிரிழந்த நபர் ரஷ்ய நாட்டு அரசு அதிகாரி ஒருவரின் உறவினர் எனவும் தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வறுமையில் வாடிய குடும்பம்: ஓடி வந்து உதவிய நடிகர் விஷால்…!!
Next post 300 அடி மலையிலிருந்து விழுந்து உயிருடன் வந்த அதிசய இளைஞன்! திக் திக் கதை…!!