300 அடி மலையிலிருந்து விழுந்து உயிருடன் வந்த அதிசய இளைஞன்! திக் திக் கதை…!!
பிரித்தானியாவில் 300 அடி மலையிலிருந்த விழுந்த இளைஞன் உயிருடன் மீண்டு வந்த அதிசய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
Kent, Folkestone பகுதியை சேர்ந்த 25 வயது Mike Pearce என்ற இளைஞனே இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று இரவு Mike Pearce தான் நண்பர்களுடன் வழக்கமாக செல்லும் மலையின் உச்சிக்கு தனியாக சென்று அமர்ந்து சிந்தித்துள்ளார்.
பின்னர், அவர் எழுந்து நின்ற போது கால் தவறி கீழே விழுந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அவர் 80 பள்ளத்தில் மரக்கிளை பிடித்து தொங்கி உயிருக்கு போராடியுள்ளார்.
பின்னர், தனது போன் சார்ஜ் இல்லாமல் அணைய போவதை அறிந்த Mike Pearce, அவசர சேவைக்கு அழைக்காமல், மலை பகுதி குறித்து அறிந்த தனது நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனையடுத்த அவரின் போன் அணைந்துள்ளது. தகவல் அறிந்த நண்பர்கள் மீட்புக்குழுவினரை அழைத்துக்கொண்டு சம்பவயிடத்திற்கு சென்றுள்ளனர்.
இரண்டரை மணிநேரம் கிளையில் தொங்கிய படி உயிருக்கு போராடிய Mike Pearceஐ மீட்புக்குழுவினர் பத்திரமாக உயிருடன் மீட்டுள்ளனர்.
இதில் Mike Pearceக்கு சிறிய வெட்டு காயங்களே எற்பட்டுள்ளது. பெரிய ஆபத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்த Mike Pearce தனது வாழ்க்கையில் மறக்க முடியாத இரவு குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
Average Rating