இரண்டு குழந்தைகளின் தாய் 19 வயது மாணவனுடன் ஓட்டம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்….!!
தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 19 வயது மாணவனுடன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தலைமறைவாகினார்.
இதில் அப்பெண்ணுக்கு ஏற்கனவே முன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அடிக்கடி கணவர்களை மாற்றி வந்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இதனால் சந்தேகமடைந்த மாணவனின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவான இருவரும் செஙகல்பட்டு அருகே உள்ள லாட்ஜில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிசார் இருவரையும் மடக்கி பிடித்துள்ளனர்.
அதில் மாணவன் தான் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வந்ததாகவும், அப்போது இவருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இருவரும் தொடர்ந்து பேசி பழகியதால் நெருக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக சில நேரங்களில் குறித்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் கல்லூரி செல்வதாக கூறி பகல் வேளைகளில் இவருடைய வீட்டில் தான் இருந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
அதன் பின் பொலிசார் அப்பெண்ணை எச்சரித்து அனுப்பியதாகவும், மாணவனை பெற்றோரிடம் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
Average Rating