மதுபோதையில் வாகனம் ஓட்டிய வாலிபர்: அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து…!!

Read Time:2 Minute, 11 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3சுவிட்சர்லாந்து நாட்டில் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த பயங்கர விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Waldkirch என்ற நகரில் தான் இந்த கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது.

நேற்று அதிகாலை நேரத்தில் 29 வயதான நபர் ஒருவர் தனது காரில் பயணமாகியுள்ளார்.

சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் எதிர்ப்பக்கமாக உள்ள சாலையில் பாய்ந்துள்ளது.

அப்போது, நேருக்கு நேராக எதிர் திசையில் இருந்து வந்த கார் மீது வாலிபரின் கார் பயங்கரமாக மோதி சில மீற்றர்கள் தூரத்தில் நின்றுள்ளது.

ஆனால், வாலிபரின் காரால் மோதப்பட்ட மற்றொரு கார் பல முறை உருண்டுச்சென்று அருகில் உள்ள நிலப்பரப்பில் விழுந்துள்ளது.

இவ்விபத்தில் கார் ஓட்டிய வாலிபருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால், மற்றொரு காரில் பயணம் செய்த 74 வயதான முதியவர் மற்றும் 64 வயதான பெண் ஆகிய இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனில்லாமல் 74 வயதான முதியவர் உயிரிழந்தார்.

வாலிபரை கைது செய்து பரிசோதித்தபோது அவரது ரத்தத்தில் மது கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. வாலிபரின் ஓட்டுனர் உரிமையை பறிமுதல் செய்த பொலிசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றெடுத்த குழந்தை பேயா? கொடூர தாயின் விபரீத முடிவு…!!
Next post ஒரே நாளில் நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ ஓர் எளிய வழி…!!