ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரெயில் மோதி 3 சிறுவர்கள் பலி…!!
Read Time:1 Minute, 23 Second
டெல்லி – கால்கா மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜார்க்கண்ட் மாநிலம் தாபர் நகர் – முக்மா ரெயில் நிலையத்திற்கு இடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடந்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ரெயில் சிறுவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 9 வயது முதல் 11 வயது வரையுடைய மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களுடன் வந்த மற்ற சிறுவர்கள் நடந்த சம்பவம் குறித்து கிராமத்தில் உள்ளவர்களிடம் கூறினார்கள். போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிரிக்கெட் விளையாட சென்ற சிறுவர்கள் ரெயில் அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating