தூங்கும் குழந்தைக்கு வித்தியாசமாக ஆடை அணிவித்து அழகு பார்த்த தாயார்…!!
குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் உயிர், அதுவும் தூங்கும் குழந்தைகள் எப்போதுமே சிறப்பு. கலிபோர்னியாவின் தென்பகுதியில் குடியிருக்கும் புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது குழந்தையை பல்வேறு உடைகளை அணிவித்து மகிழ்வித்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
புகைப்படக் கலைஞர் Laura Izumikawa தனது 4 மாத குழந்தை குறித்து அவர் சிலாகித்து பேசுவது ஒரு கவிதை போலவே உள்ளது. தனது குழந்தை தூங்குவதை இரவு முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது என்ற அவர், குழந்தை ஜாய் எப்போதுமே ஆழ்ந்த உறக்கத்தை விரும்புவதாக தெரிவிக்கின்றார்.
குழந்தை மீதுள்ள அதீத பாசத்தால் அவர் தமது குழந்தைக்கு விதவிதமான ஆடைகள் அணிவித்து அதை புகைப்படமாக பதிவு செய்து தனது சமூக வலை பக்கத்தில் பதிவெற்றியுள்ளார்.
குறித்த புகைப்படங்களுக்கு மகிழ்ச்சிகரமான வாழ்த்துகள் வந்து குவிவது தமக்கு புது உத்வேகத்தை தருவதாக புகைப்படக் கலைஞர் Laura Izumikawa தெரிவித்துள்ளார்.
Average Rating