முச்சக்கர வண்டிக்குள் தவித்த குழந்தை! எச்சரிக்கை விடுத்த பொலிஸார்…!!
ஹட்டனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து குழந்தை ஒன்றை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியில் இடம்பெற்ற காணிவெல் ஒன்றினை பார்வையிட சென்ற குழந்தையொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி உரிமையாளர் காணிவேல் நிகழ்வை பார்த்துவிட்டு திரும்பிய போதே முச்சக்கர வண்டியில் குழந்தை அழுதுக் கொண்டிருந்ததை அவதானித்துள்ளார்.
பின்னர், அழுதுக் கொண்டிருந்த குழந்தையை நேற்றைய தினம் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இந்த சம்பவம் இடம் பெற்றதை தொடர்ந்து நள்ளிரவு குழந்தையை தேடி குழந்தையின் அம்மா மற்றும் உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்னர்.
காணிவேல் நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக குழந்தையை முச்சக்கர வண்டி பின் இருக்கையில் தூங்க வைத்துவிட்டு சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.
திரும்பி வந்து பார்க்கும் போது முச்சக்கர வண்டி குறித்த இடத்தை விட்டு சென்றதாகவும் அதன் பின்னரே குழந்தையை தாம் தேடி வந்ததாகவும் குழந்தையின் பெற்றோர் பொலிஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.
குழந்தை மீது அக்கறை மற்றும் பொறுப்பு இருக்க வேண்டும் என குழந்தையின் பெற்றோர்களை ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரித்ததுடன் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்தமைக்காக முச்சக்கர வண்டி உரிமையாளருக்கு குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் பொலிஸார் நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating