குழந்தைகள் மீது கொடூரமாக கார் ஏறிச்சென்ற ஓட்டுநர்! கமெராவில் சிக்கிய பதற வைக்கும் காட்சிகள்..!! வீடியோ
இந்தியாவில் சாலை ஓரத்தில் நடந்து சென்ற இரண்டு குழந்தைகள் மீது கார் ஒன்று வேகமாக ஏற்றிச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தானே பகுதியில் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவயிடத்தில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்து வீடியோவில், வேகமாக வந்த சிவப்பு நிற கார் ஒன்று சாலை ஓரத்தில் நடத்து சென்றுக்கொணடிருந்த இரண்டு குழந்தைகள் மீது ஏறிச்செல்கிறது. பின்னர், கார் ஓட்டுநர் சம்பவயிடத்தை விட்டு தப்பிச்செல்ல முயல்கிறார்.
இதில் பாதிக்கப்பட இரண்டு குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 6 வயதான Jiya Kotak என்ற குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. Parth Kotak என்ற 8 வயது குழந்தைக்கு பல பகுதிகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் Dilip Gunjal என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை கைது செய்துள்ள பொலிசார் வாகனத்தை கண்மூடித்தனமாக இயக்கிய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Dilip Gunjal கூறியதாவது, கார் கட்டுப்பாட்டை இழந்ததால் பிரேக்கு பதிலாக வேகத்தை விரைவுபடுத்தும் கருவியை அழுத்தியதாக கூறியுள்ளார்.
Average Rating