நடுவானில் வெடித்த என்ஜின்: அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் என்ஜினில் வெடி விபத்து ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் உள்ள சூரிச் விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரியா தலைநகரமான வியன்னாவிற்கு சுவிஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று புறப்பட்டுள்ளது.
விமான குழுவினர்கள் உள்பட 167 பயணிகளுடன் விமானம் பறந்தபோது திடீரென அந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
விமானத்தின் வலது பக்கம் இருந்த என்ஜின்களில் ஒன்றில் வினோதமான ஓசை எழுந்துள்ளது. அதாவது, என்ஜின் வெடித்தது போன்ற சத்தத்தை விமானிகள் கேட்டுள்ளனர்.
சூழ்நிலையை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை திருப்பி சூரிச் விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டு மற்றொரு விமானத்தில் வியன்னாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விமானத்தில் வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது பறவை ஏதாவது மோதி விபத்துக்குள்ளானதா என்பது உடனடியாக தெரியவரவில்லை.
இவ்விவகாரம் தொடர்பாக சுவிஸ் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு விமானத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
Average Rating