பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியின் தலையை மொட்டையடித்த கணவர்…!!
உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியின் தலையை கணவர் மொட்டையடித்துள்ள கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரஷித் மற்றும் நாணு ஆகிய இருவருக்கும் திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த நாணுவுக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறந்துள்ளது.
இதனால், ரஷித் மற்றும் அவரின் தாயாருக்கு ஆத்திரம் வந்துள்ளது. மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளாயே எனக்கூறிய இவர்கள், நாணுவின் தலையை மொட்டையடித்துள்ளனர். மேலும் பெண் குழந்தை பாலுக்காக அழும் போது, நானுவை பால் கொடுக்க அனுமதிக்காமல் சித்தரவதை செய்துள்ளனர்.
இதனால், தனது கணவர் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாணு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் நாணுவின் தாயாரோ, எனது மகள் அவளின் கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று கருதி புகாரினை வாபஸ் வாங்கியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, ரஷித் மற்றும் அவரின் தாயாரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அறிவுரை வழங்கியுள்ளனர் பொலிசார்.
சமீபத்தில் மும்பையில் மாமியார் ஒருவர் தனது மருமகள் பெண் குழந்தை பெற்றெடுத்தார் என்பதற்காக கார் ஒன்றினை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating