தொடங்கியது மழை – நெருங்குகிறது நாடா புயல்…!!
சென்னை அருகே மையம் கொண்டுள்ள புயல் நாளை டிசம்பர் 2-ம் தேதி கரையை கடக்கிறது. வங்கக்கடலில் உருவான இந்த புயலுக்கு நாடா என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்தப் புயல் காரணமாக சென்னை மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், நாடா புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னையில் எழும்பூர், புதுப்பேட்டை, செண்டரல், நுங்கம்பாக்க்கம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
அதேபோல், திருவாரூர், கொறடாச்சேரி, மாவூர், மாங்குடி, கங்கலாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காரைக்கால், நாகை, வேதாரண்யம், பூம்புகார் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியல் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே சென்னை அருகே சுமார் 430 கிலோமீட்டர் தொலைவில் நாடா புயல் தற்போது மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating