கலைகளுக்கு மட்டும் நடுவர்களாக இருப்போம்: லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்புவுக்கு ஸ்ரீப்ரியா கோரிக்கை…!!

Read Time:2 Minute, 15 Second

201611301713579931_sri-priya-request-to-khusboo-and-lakshmi-ramakrishnan_secvpfசில தனியார் தொலைக்காட்சிகளில் குடும்பத்தினருக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதாக கூறி, நடிகைகளை வைத்து பஞ்சாயத்து நடத்தி அவர்களுக்குள் சண்டையிட வைத்து சமாதானம் செய்து வைக்கிறார்கள். இவற்றில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகை குஷ்புவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குடும்ப பிரச்சினைக்கு தீர்வு சொல்வதாக கூறி ஒரு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி ஒன்றில் கைகலப்பு ஏற்பட்டது. இது பலராலும் விமர்சிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியாவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “கணவன், மனைவி இடையே பிரச்சனை என்றால் அதை தீர்க்க குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளன. அவர்கள் மீது ஏதேனும் குற்றம் இருந்தால் அவர்களை தண்டிக்க குற்றவியல் சட்டங்களும் உள்ளன. அவற்றை விடுத்து நடிகர்களான நாம் தொலைக்காட்சியில் அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டு தீர்ப்பு வழங்குவது சரியல்ல.

அப்படி அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க நினைத்தால் கேமரா முன் பேசாமல் நீதிமன்றத்தை அணுகும் சரியான வழிமுறையை காட்டுங்கள். நாம் கற்ற நமக்கு தெரிந்த கலைக்கு மட்டும் நடுவர்களாக இருப்போம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைதளத்தில் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொடங்கியது மழை – நெருங்குகிறது நாடா புயல்…!!
Next post திருமணம் ஆகாதவர்களிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டுவிடாதீர்கள்…!!