தந்தை-மகனின் வெறிச்செயல்: இப்படியும் கொடூரமாக கொலை செய்வார்களா?

Read Time:2 Minute, 38 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-8சுவிட்சர்லாந்து நாட்டில் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் தந்தை மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவர் சேர்ந்து இரண்டு கொலைகள் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Spiez என்ற நகரில் தான் இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது. இந்நகரில் உள்ள குழந்தைகள் நல மையம் ஒன்றில் கடந்த 2013-ம் ஆண்டு 16 வயது சிறுவன் சேர்க்கப்பட்டுள்ளான்.

இம்மையத்தில் உள்ள பிற சிறுவர்கள் அந்த 16 வயது சிறுவனிடம் அடிக்கடி தகறாரில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். ஆனால், மையத்தின் மேலாளர் இதைப்பற்றி அக்கறை காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

மையத்தில் தனக்கு நேர்ந்த தொல்லைகளை பற்றி சிறுவன் தனது தந்தையிடம் கூறியுள்ளான். மகனின் வார்த்தைகளால் ஆத்திரம் அடைந்த தந்தை சிறுவனை அழைத்துக்கொண்டு குழந்தைகள் மையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு மேலாளரும் அவருடைய காதலியும் இருந்துள்ளனர். தன்னுடைய மகனுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு நியாயம் கேட்டு தந்தை கூச்சலிட்டுள்ளார்.

இந்த கூச்சல் தகராறாக மாறி கைகளப்பில் முடிந்துள்ளது. இந்நிலையில், ஆத்திரத்தின் எல்லைக்கு சென்ற தந்தை தனது மகனுடன் சேர்ந்த மேலாளர் மற்றும் அவருடைய காதலியை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

ஒவ்வொருவரின் உடலிலும் 50-க்கும் அதிகமான காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளனர். 16 வயது சிறுவன் தந்தையுடன் சேர்ந்து கொடூரச்செயலில் ஈடுப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த இரட்டை கொலை சம்பந்தமாக இருவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இவ்வழக்கின் இறுதி விசாரணை அடுத்த வாரம் நீதிமன்றத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கத்திற்கு பயிற்சி அளித்த வீரர்: சிங்கத்திற்கு இரையான பரிதாபம்…!!
Next post கையில் பச்சை குத்தியிருந்த பட அதிபர் மதன்…!!