சிறுமிக்கு நடந்த கொடுமை.. மர்மமான முறையில் உயிரிழந்த சடலம்..!!
சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 வயதுடைய சின்னாபடுவ பிரதேசத்தினை சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.
மதுரங்குளி பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் கடந்த மாதம் 09ம் திகதி சிறுமியைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த மாணவி தற்போது கர்ப்பிணியாக உள்ளதாகவும், சந்தேக நபர் இன்று (02) புத்தளம் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிட்டம்புவ – பசியால பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றின் அறையில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை பொலிஸாருக்கு அவசர தொலைபேசி அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது..
மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating