முதலிரவில் மனைவி போட்ட பலே திட்டம்..!!
உத்திரபிரதேசத்தில் முதலிரவின் போது கணவனை தூக்கமாத்திரையால் தூங்கச் செய்து வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணங்களை கொள்ளையடித்துச் சென்ற மனைவியின் செயல் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ். இவருக்கு கடந்த 25 ஆம் திகதி குறித்த பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
அதன் பின்னர் முதலிரவு முடிந்து மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் தம்பதியினரின் அறை திறக்கப்படாததால், வீட்டில் இருந்த பெரியவர்கள் அனைவரும் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு உள் தாப்பால் இடமால் திறக்கப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்த அவர்கள், உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது பங்கஜ் மட்டும் படுத்து இருந்துள்ளார். அவரை பலமுறை எழுப்ப முற்பட்ட போது, அவர் எழும்பாத காரணத்தினால், பெரியவர்கள் அங்கிருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்துள்ளனர்.
அதன் பின்னர் எழுந்த பங்கஜிடம் விவரம் கேட்ட போது, மணமகள் கொடுத்த தண்ணீரை குடித்தவுடன் தான் உறங்கிவிட்டதாக கூறியுள்ளார்.
இதனால் சற்று பதற்றமடைந்த உறவினர்கள் மணமகளை வீடு முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் கிடைக்க வில்லை. அதன் பின்னர் தான் தெரியவந்துள்ளது, அவர் வீட்டில் இருந்த 77 ஆயிரம் ரூபாய் மற்றும் 175 கிராம் தங்கநகைகளை கொளையடித்துச் சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்து வருகின்றனர்.
Average Rating