வன்னிப்புலிகளின் வடமுனை முகாம் மீது TMVPஅதிரடி முற்றுகைத் தாக்குதல். ஐவர் பலி, மூவர் கைது
வன்னிப்புலிகளின் வடமுனை முகாம் மீது தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவு அதிரடி முற்றுகைத் தாக்குதல். ஐவர் பலி, மூவர் கைது பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் முகாம் முற்றாகத் தகர்ப்பு ….
மட்டக்களப்பு மாவட்டத்தின் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வடமுனையிலுள்ள வன்னிப்புலிகளின் பிரதான இராணுவ முகாம் இன்று காலை தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் இராணுவப் பிரிவின் அதிரடித் தாக்குதலுக்கு இலக்கானது.
22.08.06காலை 6:10 மணியளவில் வன்னிப்புலிகளின் வடமுனை இராணுவ முகாமை முற்றுகையிட்ட தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவினர் முகாம்மீது அதிரடித்தாக்குதல் மேற்கொண்டனர். சுமார் 3மணிநேரம் இடம்பெற்ற சமரின் பின் முகாம் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவின் வசமானது.
தாக்குதல் இடம்பெற்ற சமயம் மேற்படி முகாமில் 30இற்கும் மேற்பட்ட வன்னிப்புலிகளின் உறுப்பினர்கள் இருந்துள்ளனர். எனினும் அவர்களினால் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் இராணுவப் பிரிவின் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை.
இம்மோதலில் வன்னிப்புலிகளின் தரப்பில் ஐவர் கொல்லப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண புலனாய்வு முக்கியஸ்தர் கீர்த்தியின் நேரடி உதவியாளர்கள் என்பதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சகோதர இனப்படுகொலைகள், கொள்ளைகள் போன்றவற்றின் நேரடித் தொடர்பு உடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன் 9துப்பாக்கிகள், இரண்டு தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பன கைப்பற்றப்பட்டதுடன், வன்னிப்புலிகளின் வாகனமொன்று தீமூட்டி எரிக்கப்பட்டதுடன் முகாம் முற்றாக தகர்க்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலை மேற்கொண்ட தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவினர் எவ்வித சேதமும் இன்றி தமது தளங்களுக்கு திரும்பியுள்ளனர்.
தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் இராணுவப் பிரிவினரால் வன்னிப்புலிகளின் முகாமிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களாவன,
ரி56 ரக துப்பாக்கிகள் 05
ஏ.கே 47ரக துப்பாக்கிகள் 04
பி.கே துப்பாக்கி ரவைகள் 3000
கைக்குண்டுகள் 20
ஏ.கே 47ரக துப்பாக்கி ரவைகள் 5500
கோல்சர் 02
ஏ.கே மகசின் 33
இன்று காலை 6:10 மணியளவில் வன்னிப்புலிகளின் வடமுனை இராணுவ முகாமை முற்றுகையிட்ட தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவினர் முகாம்மீது அதிரடித்தாக்குதல் மேற்கொண்டனர்… கைது செய்யப்பட்ட மூவரும் வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண புலனாய்வு முக்கியஸ்தர் கீர்த்தியின் நேரடி உதவியாளர்கள் என்பதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சகோதர இனப்படுகொலைகள், கொள்ளைகள் போன்றவற்றின் நேரடித் தொடர்பு உடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது…..