பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் உயிரிழப்பு…!!
Read Time:1 Minute, 19 Second
கெக்கிராவ – தம்புளு ஹல்மில்லவெவ இராணுவ முகாமில் பயிற்சி பெற்று வந்த 21 வயதான இளைஞர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.
திடீரென சுகவீனமுற்ற இளைஞர் நேற்று தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தை சேர்ந்த எஸ்.கே. சேனாரத்ன என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மூனறு வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தில் சிப்பாயாக இணைந்து கொண்ட இந்த இளைஞர் முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென சுகவீனமுற்றுள்ளார்.
பயிற்சியின் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து கல்கிரியாகம பொலிஸாரும், இராணுவ பொலிஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating