மனைவியின் மடியில் உயிரை விட்ட கணவர்: உதவி செய்யாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்…!!
தமிழகத்தில் வங்கியில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நாட்டில், கும்பகோணத்தை அடுத்து பாபநாசம் என்ற பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக ஏராளமானோர் வரிசையில் நின்றுள்ளனர். அவ்வரிசையில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன என்ற 75 வயது முதியவர், தன் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக தன் மனைவியுடன் நின்றுள்ளார்.
வரிசையில் ஏராளமானோர் நின்றதால் அவர்களுக்கு மத்தியில் இவர்கள் இருவரும் சிக்கிக் கொண்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து வரிசையில் கால்கடுக்க நின்ற சுப்பிரமணியன் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மயங்கி விழுந்துள்ளார்.
அருகில் நின்ற அவரது மனைவி தையல்நாயகி, கணவரை தன் மடியில் வைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கூப்பிட்டுச் செல்ல உதவுமாறு அங்கிருந்த பொதுமக்களிடம் கதறியுள்ளார்.
ஆனால், அங்கிருந்த பொதுமக்களோ முதியவரின் உயிரை பொருட்படுத்தாமல் வங்கியில் பணம் எடுப்பதிலேயே குறிக்கோளாக இருந்துள்ளனர். மேலும் சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனரே தவிர உதவிக்கு யாரும் முன்வரவில்லை.
நீண்ட நேரத்திற்கு பிறகு வங்கி ஊழியர்கள் அழைத்த பிறகு அங்கு வந்த 108 மருத்துவக்குழுவினர், முதியவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். வங்கிக்கு பணம் எடுக்க வந்த இடத்தில் மனைவியின் மடியில் முதியவர் உயிர்விட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Average Rating