முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு! அப்பல்லோ பரபரப்பு தகவல்…!!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் இன்று திடீரென அப்போலோ மருத்துவமனை வளாகம் பரபரப்படைந்தது.
அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் பொலிசாரும் அப்பல்லோ விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது.
அவரது உடல் நிலையை இதயவியல், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating