அப்பல்லோவில் குவிந்த தொண்டர்கள்! கதறி அழும் பெண்கள்- பரபரப்பில் தமிழகம்…!!
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடம் என தகவல் வெளியானதை அடுத்து அதிமுகவின் அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்து வருவதால் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளதையடுத்து, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து அவர் உடனடியாக விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். மேலும் மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, ராஜ்நாத சிங், பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டவர்கள் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.
ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாய் தகவல் வெளியானதை அடுத்து அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்த வண்ணம் உள்ளனர்.
குறித்த தகவல் வெளியானதும் சென்னையில் பெட்ரோல் பங்குகள் மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை, சேலம், நாமக்கல், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி ஆளுநர் கட்டுபாட்டில் தமிழகத்தை கொண்டு வர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அப்பல்லோ வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதாவின் இதயம் கருவிகள் மூலம் இயல்பு நிலைக்கு கொண்டு வரச் செய்யும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிகத் தேர்ந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் முதல்வர். அவர் விரைவில் நலம்பெற அப்போலோ ஊழியர்கள் மேற்கொள்ளும் பிரார்த்தனையில் அனைவரும் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating