“தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்” என்னும் தகவல் தவறானது..அப்பலோ அறிக்கை..!!
Read Time:1 Minute, 24 Second
கடந்த செப்டம்பர் 22ம் திகதி நீர்ச்சத்துக்கு குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்துவந்தார்.
அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் கடந்த வாரம் சாதாரண மருத்துவ அறைக்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன
இதற்கிடையில் நேற்று மாலை திடீரென முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவமனை செய்திகள் தெரிவித்த தகவல் தவறானது என அப்பலோ மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
உயிர் காக்கும் கருவி மூலம் தொடர்ந்தும் சிகிச்சை நடைபெறுகிறது.
Average Rating