தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் பலி
Read Time:56 Second
அமெரிக்காவில் அரிசோனா மாநிலம் பீனிக்ஸ் அருகே உள்ள ஹூவாசுகா நகரைச்சேர்ந்தவர் சார்லி பாஸ்லே. 39 வயதான இவர் தன் தந்தையுடன் சேர்ந்து வீட்டுக்கூரையை பழுது பார்த்தார். அப்போது அதில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் அவரை 300 முறைக்கு மேல் கொட்டின. அவரது தந்தையையும் தேனீக்கள் கொட்டின. இதில் தேனீக்களின் விஷம் உடலில் ஏறி அவர் இறந்து போனார்.அவரது 62 வயதுத்தந்தை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
தேனீக்கள் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு 1950-ம்ஆண்டு தேன் சேகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.