சேலம் மாவட்டத்தில் 13 பஸ் கண்ணாடிகள் கல்வீசி உடைப்பு: பேக்கரி மீதும் கல்வீச்சு…!!
சேலத்தில் இருந்து நேற்று மாலை ஆத்தூருக்கு ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் புத்திரகவுண்டம் பாளையம் பகுதியில் வந்த போது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கினர்.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்ததால் பயணிகள் இறக்கி விடப்பட்டு பஸ் ஆத்தூர் பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இது குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல சேலத்தில் இருந்த மேட்டூருக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.இந்த பஸ் ஓமலுரை அடுத்த பஞ்சு காளிப்பட்டி பகுதியில் சென்ற போது கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது. இதே போல அந்த பகுதியில் மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
இதே போல தாராபுரம் அருகே 2 அரசு டவுன் பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. ஓமலூர் பகுதியில் 5 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் குறித்து குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆத்தூரில் இருந்து தம்மம்பட்டி சென்ற அரசு டவுன் பஸ் பள்ளக்காடு பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இதே போல தம்மம்பட்டியில் இருந்து ஆத்தூர் சென்ற அரசு டவுன் பஸ் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் கல் வீசி தாக்கியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
சேலம் உருக்காலை அருகில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி அருகில் வனவாசி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது.
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தாரமங்கலத்திற்கு சென்ற அரசு டவுன் பஸ்சும் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி அருகே சென்ற போது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது.
சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற பேக்கரியில் நேற்று மாலை மர்ம நபர்கள் திடீரென கல் வீசி தாக்கினர். இதில் பேக்கரியின் முன் பகுதியில் இருந்த கண்ணாடி உடைந்து நொறுங்கியதால் பேக்கரி உடனே பூட்டப்பட்டது. இதையடுத்து மாநகர் முழுவதும் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.
Average Rating