திருமங்கலத்தில் லாரி மோதி பெண் பலி…!!
Read Time:1 Minute, 13 Second
திருமங்கலம்- உசிலம் பட்டி சந்திப்பு 4 வழிச் சாலையில் இன்று காலை ஓரு லாரி வந்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ஜிப்சம் ஏற்றி சென்ற அந்த லாரியை, கள்ளிக்குடி கே.வெள்ளங்குளத்தைச் சேர்ந்த குணசேகரன் ஓட்டி வந்தார்.
அப்போது அங்கு சுமார் 45 வயது மதிக்க்கத்தக்க ஓரு பெண் சாலையை கடந்தார். அவர் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating