பாகிஸ்தான் விமானம் விழுந்து நொறுங்கியது: 47 பயணிகளும் உயிரிழப்பு…!!

Read Time:1 Minute, 28 Second

201612071906131455_47-people-were-killed-in-a-plane-crash-near-pakistans_secvpfபாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று, இன்று கைபர் பாக்துன்க்வா மாகாணம் சிட்ரல் பகுதியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டது. இதில், 47 பேர் பயணம் செய்தனர். ஆனால், இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டது.

இதனால் தரைக் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் சிக்னல் கிடைக்கும் என எதிர்பார்த்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உடனே விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காணாமல் போன விமானம் அப்போட்டாபாத் மாவட்டம் ஹவேலியன் அருகில் உள்ள பிப்பிலியன் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து அப்பகுதிக்கு ஹெலிகாப்டர்களுடன் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் பயணம் செய்த 2 குழந்தைகள், 9 பெண்கள் உள்பட 47 பேரும் இறந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறந்த சிறுவனுக்கு உயிர் கொடுத்த மத போதகர்…!!
Next post விருத்தாசலம் அருகே கிராம மக்கள் 40 பேருக்கு திடீர் வாந்தி – மயக்கம்…!!