மரணத்தின் பிடியில் இருந்த குழந்தை: இப்போது எப்படி இருக்கிறான்?
கடந்த 2015ம் ஆண்டு டென்னிசி பகுதியை சேர்ந்த ப்ரிச்சில்லா மோர்ஸ் என்பவர் தனது ஃபேஸ்புக்கின் பக்கத்தில், ஒரு காப்பகத்தில் பட்டினியால் வாடும் பல்கேரிய குழந்தையின் அதிர்ச்சியளிக்கும் சோகமான படத்தை பார்த்துள்ளார்.
ரியான் என்ற அந்த குழந்தையின் படத்தை பார்த்த ப்ரிச்சில்லா மற்றும் அவரின் கணவர் டேவிட் அந்த குழந்தைக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
ரியான் குழந்தை பார்ப்பதற்கு, மிகவும் மெலிந்த உடல், மெல்லிய முடி, வெளிர் உடல் போன்ற உடலமைப்புடன் இறக்கும் தருவாயில் இருந்தது.
மேலும் இதேபோல் ப்ரிச்சில்லா, முன்னதாகவே மெக்கென்சி எனும் பெண் குழந்தைக்கு இருதய கோளாறு இருப்பது தெரிந்தும் அந்த குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார்கள்.
எனவே மெக்கென்சி என்ற பெண் குழந்தையை போலவே குழந்தை ரியானையும் காப்பாற்றுவதற்கு ப்ரிச்சில்லா மற்றும் அவரின் குடும்பத்தார்கள் கடுமையான முயற்சிகளை செய்து வந்தார்கள்.
ப்ரிச்சில்லா, ரியானின் வாழ்க்கையை நல்ல நிலைக்கு எடுத்து செல்ல தங்களால் முடியும் என்ற நம்பிக்கையுடன், ஒரு வருட காலம் வரை வாழ்ந்து வந்துள்ளார்.
தற்போது ப்ரிச்சில்லா, தத்து எடுத்து வளர்த்த மெக்கென்சி மற்றும் ப்ரிச்சில்லா ஆகிய இரு குழந்தைகளும், ப்ரிச்சில்லா மற்றும் டேவிட்டின் அரவணைப்பில் ஆரோக்கியமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
Average Rating