சுவிஸில் வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து…!!
Read Time:1 Minute, 20 Second
சுவிட்சர்லாந்தில் வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Biberist பகுதியிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவத்தின் போது வேன் ஒன்று ரயில் பாதையை கடக்க முயன்ற போது தண்டவாளத்தில் சிக்கியுள்ளது. வாகனத்தின் ஓட்டுநர் கடுமையாக முயற்சி செய்தும் வேனை நகர்த்த முடியாமல் போயுள்ளது.
இதனையடுத்து, ரயில் வருவதை அறிந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தும் படி செய்கை செய்துள்ளார். ஆனால், வேகமாக வந்த ரயில் வேன் மீது மோதி தர தரவென இழுத்துச் சென்றுள்ளது.
இதன்போது, ரயில் 30 பேர் பயணித்துள்ளனர். எனினும், இந்த விபத்தில் வேன் மட்டும் கடுமையாக சேதமடைந்துள்ளது. சம்பவயிடத்தை ஆய்வு செய்த பொலிசார் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
Average Rating