நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட நடிகை ஜெயஸ்ரீ! கொன்றது ஏன்? தோழி திடுக்கிடும் வாக்குமூலம்…!!
துணை நடிகை ஜெயஸ்ரீ-யைக் கொன்றது அவரது தோழியே என பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேலத்தை சேர்ந்தவர் தயாளன், இவருடைய மூத்த மகள் ஜெயஸ்ரீ(வயது 45). துணை நடிகையான இவர், சிறு சிறு விளம்பரங்கள், டிவி சீரியல்கள் மற்றும் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து உள்ளார்.
திருமணமே செய்து கொள்ளாத இவர் சாலிகிராமத்தில் உள்ள தனது பங்களாவில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி தனது வீட்டின் படுக்கையறையில் நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயஸ்ரீ-யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட பொலிசார், அவரின் கைப்பேசியை சோதனை செய்து பார்த்த பொழுது அவரது தோழியான மாங்காட்டை சேர்ந்த அசீனா என்ற ஜூனத்பேகம், என்பவருடன் கடைசியாக பேசியது தெரிய வந்துள்ளது.
அசீனாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பொலிசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்தான் தனது கள்ளக்காதலன் சிராஜுதீன் என்பவருடன் சேர்ந்து ஜெயஸ்ரீ-யை கொன்றார் என்பது உறுதியாக தெரியவந்துள்ளது.
மேலும், அசீனாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். அவருடைய கணவர் அசீனாவை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இந்நிலையில், மாங்காட்டில் தனியாக வசித்து வந்த அசீனா அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிராஜுதீன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
சிராஜுதினுடன் உல்லாசமாக இருப்பதற்கு தன் வீட்டில் குழந்தைகள் இருப்பதால் இடையூறு ஏற்படும் என்று ஜெயஸ்ரீ வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அசீனாவின் குழந்தைக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் மருத்துவச் செலவுக்காக ஜெயஸ்ரீ-யிடம் பனம் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் குறைந்த அளவே பணம் உள்ளது, அதை வேண்டுமானால் பெற்றுக் கொள் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அசீனா, ஜெயஸ்ரீ வைத்திருந்த நகை பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.
இதன்படி டிசம்பர் 4 ஆம் திகதி ஜெயஸ்ரீக்கு போன் செய்து தான் சிராஜுதீனுடன் அங்கு வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு அடைந்த அசீனா மற்றும் சிராஜுதீன் வழக்கம்போல் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
இதில் போதை தலைக்கேறியதும் ஜெயஸ்ரீ அப்படியே கட்டிலில் படுத்துக்கொண்டார்.
பின்னர், அசீனா மற்றும் சிராஜுதீன் திட்டமிட்டபடி துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், தலையணையை அவரது முகத்தில் வைத்து அழுத்தியும் கொலை செய்தனர்.
பின்னர் நகைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர், பொலிசாரை திசை திருப்புவதற்காக நிர்வாண நிலையில் படுக்க வைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து ஜெயஸ்ரீ-யை கொன்றதை இருவரும் நடித்துக் காட்டியுள்ளனர், இவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.
Average Rating