தாயாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பன்: கொடூரமாக கொலை செய்த மகன்…!!
பிரித்தானிய நாட்டில் தனது தாயாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனை கொடூரமாக குத்தி கொலை செய்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Sheffield நகரில் Lucas Bigley(19) என்ற நபர் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
இவருக்கு Matthew Wilson(19) என்ற நெருங்கிய நண்பன் இருந்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக உயிருக்கு உயிரான தோழர்களாக பழகி வந்துள்ளனர்.
நண்பனை பார்ப்பதற்காக மேத்தியூ அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், நண்பரின் தாயாருக்கும் மேத்தியூவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தாயாருடன் தனது நண்பன் ரகசிய தொடர்பு வைத்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்த லூகஸ் அவரது நட்பை துண்டித்துள்ளார்.
எனினும், இருவரின் உறவு தொடர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மே 28-ம் திகதி லூகஸ் மற்றும் மேத்தியூவிற்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற லூகஸ் கத்தியை எடுத்து மேத்தியூவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மேத்தியூ சம்பவ இடத்திலேயே பலியானார்.
நண்பனை கொன்ற வழக்கில் லூகஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், லூகஸ் மீதான இறுதி வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது, லூகஸ் மீதான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நண்பனை கொடூரமாக குத்தி கொலை செய்த குற்றத்திற்காக லூகஸிற்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.
Average Rating