கோதுமை தீவிர வயிற்று வலியை ஏற்படுத்துமா?
அனைவரும் விரும்பி சாப்பிடும் கோதுமை மாவின் மூலம் கஞ்சி, தோசை, ரொட்டி போன்று வித விதமான உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.
ஆனால் ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்கள் கோதுமையினால் செயத உணவை சாப்பிட்டால் தீவிர வாய்வு பிரச்சனை மற்றும் வயிற்று வலியும் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள் அதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
கோதுமை வாய்வு மற்றும் வயிற்று வலி பிரச்சனையை ஏற்படுத்துமா?
ஒரு சிலருக்கு கோதுமை அலர்ஜியாக இருந்தால், அவர்களுக்கு கோதுமையின் மூலம் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட பின் வாய்வு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனை ஏற்பட காரணமாக இருக்கிறது.
கோதுமையில் க்ளுடென் என்ற புரதம் இருப்பதால், உடற்குழி நோயின் மூலம் பாதிப்படைந்தவர்கள் கோதுமையால் தாயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடும் போது, அவர்களின் உடம்பில் தீவிர எதிர்வினை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நாம் கோதுமை உணவுகளை உண்ணும் போது, நம் உடம்பின் நோயெதிர்ப்பு சக்தி அமைப்பின் ஊட்டச் சத்துக்களை உறிஞ்சும் குடலின் நூல் போன்ற சிறிய உட்பூச்சை தாக்கும். இதன் மூலம் உங்களுக்கு உடற்குழி நோயின் தாக்கம் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளலாம்.
நமக்கு உடற்குழி நோயின் தாக்கம் ஏற்பட்டிருந்தால், நாம் கோதுமை உணவுகளை சாப்பிட்ட 30 நிமிடங்களில், வயிற்று வலியும், வாய்வும் ஏற்படுவதுடன், வாந்தி, மலச்சிக்கல், உடல் எடை குறைவு, வெளிரிய நிறத்திலான மலம், மன அழுத்தம், பதற்றம், கீல்வாதம், எலும்பு வலி, சரும அரிப்பு, மற்றும் ரத்த சோகை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
கோதுமை உணவுகளை சாப்பிடும் போது, செரிமான பிரச்சனையை தவிர்த்து, மற்ற மேலே குறிப்பிட்ட அறிகுறிகளை உணர்ந்தால், உங்களுக்கு கோதுமை உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்துகிறது என்று அர்த்தமாகும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating