வில்லியனூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குபோட்டு தற்கொலை…!!
வில்லியனூர் அருகே ஒதியம்பட்டை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் நந்தினி. (வயது15). இவர் வில்லியனூர் கண்ணகி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மாலை நந்தினி அதே பகுதியை சேர்ந்த தனது தோழியுடன் அருகில் உள்ள கடைக்கு சென்றார்.
பின்னர் நந்தினி வீடு திரும்பிய போது தன்னிடம் கூறாமல் எப்படி தோழியுடன் கடைக்கு செல்லலாம் என அவரது தாய் கிருஷ்ணவேணி கண்டித்துள்ளார். இதனால் நந்தினி மனவேதனை அடைந்தார். பின்னர் வீட்டின் அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.
வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த கிருஷ்ணவேணி கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை,. இதையடுத்து அக்கம் பக்த்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது அங்கு மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் நந்தினி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் நந்தினியை மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், ஏட்டு குப்புசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating