விடுதலைப்புலிகளுக்கு உதவியா? அமெரிக்க டாக்டரிடம் அதிரடி சோதனை

Read Time:1 Minute, 30 Second

tro2.gifஅமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் சிறுநீரக சிறப்பு சிகிச்சை டாக்டராக பணிபுரிந்து வருபவர், நாகரத்தினம் ரஞ்சிதன். அவர், இலங்கை தமிழர் பகுதியான வட கிழக்கு மாநிலத்தில் செயல்பட்டுவரும் தமிழர் மறுவாழ்வு அமைப்பின் (T.R.O) தலைவராக இருந்து வருகிறார்.

விடுதலைப்புலிகளுக்காக, விண்ணில் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை கள்ள மார்க்கெட்டில் வாங்க திட்டமிட்டதாக, சமீபத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சதி திட்டத்தில் தொடர்புடைய மேலும் சிலரை அமெரிக்க புலனாய்வு பிரிவு போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில், டாக்டர் நாகரத்தினம் ரஞ்சிதனின் அலுவலகம் மற்றும் சில ஏஜெண்டுகளிடம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, 5 கம்ப்ïட்டர்களை பறிமுதல் செய்தனர். இதற்கிடையில், விடுதலைப்புலிகளுக்கு நிதி உதவி செய்யவில்லை என்று டாக்டர் நாகரத்தினம் ரஞ்சிதன் கூறி இருக்கிறார். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post யாழ்பாணத்தில் அமைதி திரிகோணமலையில் சண்டை
Next post சீனாவில் 107 வயது மூதாட்டிக்கு “பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது