ஜப்பான் அருங்காட்சியகத்தில் மனித முகங்களுடன் பாறைகள்…!!
Read Time:1 Minute, 7 Second
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே சிசிபு நகரம் உள்ளது. அங்குள்ள அருங்காட்சியகத்தில் மனித முகங்களுடன் கூடிய பாறைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அந்த பாறைகளில் மனித முகங்கள் செயற்கையாக செதுக்கப்படவில்லை. இயற்கையாகவே உருவான மனித முக பாறைகள் சேகரித்து அங்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியத்தில் 1700 மனித முக பாறைகள் உள்ளன. சில முகங்கள் அழுத நிலையிலும், சிரித்த நிலையிலும் உள்ளன. சில பாறைகள் வியப்பால் வாயை பிளந்த நிலையிலும், மற்றவை சிந்தனை மற்றும் கவலையில் ஆழ்ந்த நிலையிலும் இருப்பது போன்று உள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக இதுபோன்ற பாறைகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating