வார்தா புயல் தாக்குதல் எதிரொலி: நாளை 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

Read Time:1 Minute, 48 Second

201612132021346101_vardah-storm-three-district-schools-leave-tomorrow_secvpfவார்தா புயல் எதிரொலியால் நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘வார்தா’ புயல் சென்னை அருகே நேற்று கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது கன மழையுடன் பலத்த காற்று வீசியது. புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

புயலால் சாலைகளில் வீழ்ந்த மரங்களை வெட்டி போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. மின்விநியோகத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும், இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

இந்நிலையில் வார்தா புயல் பாதிப்பு காரணமாக நாளை சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சளிப்பிரச்சினைக்கு தீர்வு தரும் கருந்துளசி…!!
Next post அனுபவம் மிகுந்த இயக்குனராக தனுஷ் செயல்படுகிறார்: சாயாசிங்…!!