பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி: அமெரிக்கா..!!
Read Time:1 Minute, 8 Second
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சிரியாவில் பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இவர்கள் டிசம்பர் 4-ம் தேதி ராக்கா நகரில் நிகழ்த்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மூன்று பேரும் பௌவுபக்கர் அல்-ஹைகிம் என்பவர் கட்டுப்பாட்டில் உள்ள நெட்வொர்கை சேர்ந்தவர்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் தீவிரவாத தாக்குதலில் சுமார் 130 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating