ஜெயலலிதா கடைசிவரை செய்ய தவறிய விஷயம் இதுதான்…!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தனது வாழ்நாளில் கடைசிவரை ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு புகழ்பெற்ற நடிகை, மதிநுட்பம் மிகுந்த அரசியல்வாதி, சக்திவாய்ந்த பேச்சாளர் என்று தான் அனைவருக்கும் தெரியும்.
அப்படிப்பட்ட ஒரு சிறந்த தலைவியான ஜெயலலிதாவால் கட்டுப்படுத்த முடியாத இரண்டு விஷயங்கள் உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா 120 படங்களில் நடித்துள்ளார். அவர் தன்னை நேர்த்தியாக காட்டிக்கொள்வதில் வல்லவராக இருந்தார். இவருக்கு சேலைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஜெயலலிதாவிற்கு ஷாப்பிங் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும் குறிப்பாக அவர் ஷாப்பிங் சென்றால் சுமார் ரூ. 3-4 லட்சங்களுக்கு சேலை வாங்குவார்.
அவரிடம் மிகப்பெரிய சேலை கலெக்ஷன்கள் உள்ளது. ஆனால் ஒருகட்டத்தில் அவருக்கு அவற்றின் மீது உள்ள ஆசைகள் அனைத்தும் குறைந்துவிட்டது. ஆனால் அவரால் கடைசி வரை கட்டுப்படுத்த முடியாத விஷயம் என்றால் சாக்லெட் மற்றும் ஐஸ்கிரீம்கள் தான்.
அவர் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கூட அவருக்கு இவைமிகவும் பிடித்தமானவை. சில நேரங்களில் சட்டசபையில் கூட அவர் சிறு சாக்லெட்களை சாப்பிடுவார்.
அவர் உணவு இடைவேளைக்கு பின்னரோ, இரவில் அதிக நேரம் பணியிருந்தாலோ அதைப்பற்றி கவலைப்படமாட்டார். அதேபோல ஒரு அரசு நிகழ்ச்சி என்றால் அதில் மாணவர்கள் என்ன நிறத்தில் ஆடை அணிய வேண்டும், என்ன கலர் ரிப்பன் கட்ட வேண்டும் என்பது வரை அவரே தீர்மானிப்பார் என தனது நினைவுகளை அந்த பத்திரிக்கையாளர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Average Rating