மனைவிக்காக பெற்ற மகளை கொடூரமாக கொன்ற பாசக்கார தந்தை: பதற வைக்கும் காரணம்…!!
பிரித்தானியாவில் தந்தை ஒருவர் பெற்ற மகளை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
இறப்பு குறித்து நீதிமன்றம் நடத்திய விசாரணையின் மூலமே நடந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
12 வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த 44 வயதான Darren Flux Edmonds என்ற நபரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.
தன்னை பிரிந்து சென்ற மனைவிக்கு தண்டனை அளிக்கும் நோக்கத்தில் Darren Flux Edmonds, இரண்டு நாய்களை கொன்றுள்ளார்.
பின்னர், தனது 6 வயது மகள் Keziahவை குளியல் தொட்டியில் மூழ்கடித்து கொன்று படுக்கையில் இறந்த நாய்களுக்கு நடுவில் வைத்துள்ளார்.
பின்னர், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து Darren Flux Edmonds மனைவி Nikki கூறியதாவது, எனது மகள் Keziah தான் எனது உலகம். தற்போது, என் உலகமே முடிந்துவிட்டது. இனி இந்த உலகத்தில் நான் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என தெரிவித்துள்ளார்.
Average Rating