உணவு சாப்பிட்டதும் தூங்கக் கூடாது ஏன் தெரியுமா?

Read Time:2 Minute, 46 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-5நமக்கு தூக்கம் ஆரோக்கியமானதாக இருந்தாலும் பகல் நேரத்தில் உணவை சாப்பிட்டவுடன் தூங்குவது, இரவில் தூங்குவதற்கு முன் சாப்பிடுவது இது போன்ற செயல்கள் நமக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

எனவே நாம் தினமும் பகலில் உறங்குவது, சாப்பிட்டவுடன் உறங்குவது போன்ற செயல்களால் நமது உடலுக்கு ஏற்படும் விளைவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

உணவு சாப்பிட்டதும் உறங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்

நாம் உணவு சாப்பிட்டதும் தூங்குவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. ஏனெனில் கலோரிகள் நிறைந்த உணவை நாம் சாப்பிட்டவுடன் உறங்குவதால் உடல் பருமன் விரைவில் அதிகரித்து விடுகிறது.

உணவு உட்கொண்ட உடனே தூங்கினால், நெஞ்செரிச்சல் ஏற்படும். ஏனெனில் உணவு உண்ட பின் தூங்குவதால், நமது உடம்பின் உணவுக்குழாய் வழியாக இரைப்பில் உள்ள அமிலமானது மேலே ஏறி, நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது.

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், உணவை உட்கொண்ட உடனேயே தூங்கக் கூடாது. ஏனெனில் அவர்களின் உடம்பில் உள்ள இரைப்பையின் உணவுக்குழாயில் எதிர்வினையை உண்டாக்கி இருமல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

உணவு உட்கொண்டதும் தூங்க சென்றால், பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே உணவு சாப்பிட்டவுடன் தூங்குவது மிகவும் ஆபத்தானது.

இரவில் சாப்பிட்டவுடன் தூங்க சென்றால், தூக்கமின்மை பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது மது அருந்தினாலோ இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டிரம்ப்பை கொல்ல முயன்ற பிரித்தானியா இளைஞர்! அதிரடி தண்டனை…!!
Next post இன்றைக்கு பேங்க்ல பணம் வச்சிருக்கிறவங்க நிலைமை இதுதான்…. செம்ம கலாய் காட்சி…!! வீடியோ