திருவண்ணாமலையில் மின்வாரிய அதிகாரி வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…!!
திருவண்ணாமலை வேங்கிக்கால் அசோக் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 49). இவர் திருக்கோவிலூர் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை செயற் பொறியாளராக உள்ளார்.
இவரது மனைவி ஊத்தங்கரையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். அவர் அங்கு தங்கியிருந்து பணி செய்கிறார்.
கடந்த 11-ந் தேதி மனைவியை பார்க்க ராஜேந்திரன் ஊத்தங்கரைக்கு சென்றிருந்தார். பின்னர் 12-ந் தேதி ஊருக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
அதில் இருந்த 20 பவுன் நகை, ரொக்க பணம், வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating