ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!!
பிரித்தானியாவின் பிரிங்டன் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில், ரயிலின் முதல் வகுப்பில் பெண் ஒருவர் தன் கைக்குழந்தையுடன் ஏறி இருக்கையில் அமர்கிறார். அவர் அருகில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இங்கெல்லாம் நீ உட்கார கூடாது, இது முதல் வகுப்பு என கொஞ்சம் அதட்டும் தோனியில் கூறுகிறார்.
அதற்கு அந்த குழந்தையின் தாய், எனக்கு இங்கு அமர உரிமையுள்ளது. ஏனென்றால் என்னிடம் முதல்வகுப்புக்கான டிக்கெட் உள்ளது என கூற அதற்கு அந்த பெண்மணி உன் குழந்தையின் அழுகை கத்தல் எனக்கு தொந்தரவாக உள்ளது என கூறினார்.
அதற்கு அந்த குழந்தையின் தாய், என் குழந்தை ஒன்றும் உங்கள் அளவுக்கு கத்தவில்லை என கூற அது வாக்குவாதமாக மாறி அந்த பெண் அங்கிருந்து எழுந்து போவது போல வீடியோ காட்சியில் உள்ளது.
வீடியோ காட்சியை எடுத்தவர், இவர்கள் வாக்குவாதம் முற்றுவதை பார்த்து அங்கிருந்த மற்ற பயணிகள் தான் இருவரையும் சமாதானப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
Average Rating