பழனி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள்…!!
Read Time:57 Second
பழனியைச் சேர்ந்த பெண்ணுக்கு சின்னாள ப்பட்டி ஆஸ்பத்திரியில் 3 குழந்தைகள் பிறந்தன.
பழனி அருகே உள்ள நெய்க்காரபட்டி எல்லம நாயக்கன்புதூரைச் சேர்ந்தவர் சின்னக்காளை இவரது மனைவி கம்மாடிச்சி (வயது 25). இவர்களுக்கு 6 வயதில் இளமாறன் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கம்மாடிச்சி 2-வது முறையாக கர்ப்பமானார்.
பிரசவத்துக்காக சின்னாளப் பட்டியில் உள்ள காந்திகிராமம் கஸ்தூரிபா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. அடுத்தடுத்து பிறந்த இந்த குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
Average Rating