திருமண விழாவிற்குச் சென்ற 7 பேர் சாலை விபத்தில் பலி: ஜார்க்கண்டில் பரிதாபம்…!!
Read Time:1 Minute, 24 Second
ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்ட தலைநகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹர்ஷன் மோட் என்ற இடத்தில் நேற்றிரவு வாகனம் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பீகாரின் ரோத்தஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், பலமு மாவட்டம் லெஸ்லிகஞ்ச் பகுதியில் நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்க வந்தபோது விபத்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோசமான சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்தனர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் தாறுமாறாகச் சென்றதால் மரத்தில் மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரையும் ராஞ்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஜார்க்கண்ட் போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating