மீண்டும் வருகிறது வர்தா! மழை நீடிக்கும்..!!
Read Time:1 Minute, 7 Second
வங்க கடலில் அந்தமான் அருகே உருவான வர்தா புயல் தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களை சுழன்று அடித்தது.
கர்நாடகாவிலும் பலத்த மழை பொழிய தற்போது அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள வர்தா, வங்க கடலுக்குள் வீசும் காற்றை ஈர்த்து வருகிறது.
இதற்கு மேலும் மேகக்கூட்டங்களை இழுக்கும் பட்சத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்படுகிறது.
இது மீண்டும் தமிழகத்தின் தென் பகுதி வழியே புயல் புறப்பட்ட இடமான, அந்தமானுக்கு வரவும் வாய்ப்புள்ளது.
இதனையடுத்து வர்தா புயலை கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், தமிழகத்தின் ஒருசில இடங்களில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவித்துள்ளனர்.
Average Rating