மகனுக்காக இரட்டை கொலை செய்த தந்தை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் மகனுக்காக குழந்தைகள் மைய இயக்குனர் மற்றும் அவரது காதலியை கொடூரமாக கொலை செய்த தந்தைக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Spiez என்ற நகரில் குழந்தைகள் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த காப்பகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்டுள்ளான். காப்பகத்தில் சிறுவன் தங்கியிருந்தபோது சக சிறுவர்கள் அனுக்கு தொந்தரவு அளித்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இடையூறுகளை தாங்கிக்கொள்ளாத சிறுவன் தனது தந்தையுடன் புகார்களை கூறி வந்துள்ளான்.
இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு சிறுவனை அழைத்துக்கொண்டு 48 வயதான அவனது தந்தை காப்பகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, காப்பகத்தில் இருந்த 53 வயதான இயக்குனர் மற்றும் அவரது காதலியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
சில நிமிடங்களுக்கு பிறகு தகராறு முற்றியதை தொடர்ந்து சிறுவனின் தந்தை கத்தியை எடுத்து இயக்குனரை சரமாரியாக 100 முறை குத்தியுள்ளார்.
இத்தாக்குதலை தடுக்க வந்த அவரது காதலிக்கும் அதிகளவில் கத்திகுத்து விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் இருவரும் ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.
இவ்வழக்கு தொடர்பாக தந்தையை பொலிசார் கடந்த 2014ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். தந்தைக்கு உடந்தயாக இருந்த மகன் மீதும் பொலிசார் விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில், இருவரின் மீதான வழக்கு நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது, தந்தை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கொலை நடந்தபோது மகன் சிறுவனாக இருந்ததால் அவனை குழந்தைகள் நீதிமன்றத்தில் பொலிசார் ஒப்படைத்துள்ளனர். எனினும், சிறுவனுக்கு சிறுவர் சீர்த்திருத்த சிறையில் 4 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Average Rating