ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற பெண் லாரி மோதி பலி: 2 வயது குழந்தையும் பலியான பரிதாபம்…!!

Read Time:3 Minute, 9 Second

201612151620473033_atm-cash-take-lorry-accident-woman-2-age-child-died_secvpfஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வாவிக்கடை சூலக்காத்தான் வலசு பகுதியை சேர்ந்தவர் மோகனப்பிரியா. இவரது கணவர் கலையரசு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிகிறார்.

மோகனப்பிரியா தனது பெற்றோர் வீட்டில் பேக்கரி வைத்து நடத்தி வந்தார்.

மோகனப்பிரியாவுடன் திருமணம் ஆகாத இவரது தங்கை திவ்யாவும் அதே பேக்கரியை பார்த்து வந்தார்.

அக்காவும் தங்கையும் பேக்கரியை கவனித்து வந்தனர். மோகனபிரியாவுக்கு கார்த்தீயன் (6) என்ற மகனும் ஹர்சனா (2) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை பெருந்துறையில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க திவ்யா தனது அக்காள் மகள் சிறுமி ஹர்சனாவுடன் ஸ்கூட்டரில் சென்றார்.

நீண்ட வரிசையில் காத்திருந்து ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டு ஸ்கூட்டரில் திவ்யா திரும்பினார்.

பெருந்துறை அருகே டீச்சர்ஸ் காலனி நுழைவு பாலம் பைபாஸ் ரோட்டுக்கு செல்ல ரோட்டை கடக்க நின்று இருந்தார்.

அப்போது பின்னால் அலுமினிய லோடு ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் திவ்யா மற்றும் குழந்தை ஹர்சனா ஆகிய இருவர் மீதும் லாரி சக்கரம் ஏறி நசுக்கியது. இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் கூடினர். அவர்கள் இளம் பெண்ணுடன் குழந்தையும் நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு கண்ணீர் சிந்தினார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த இருவரது உடலையும் மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான திவ்யா மற்றும் குழந்தை ஹர்சனா உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுத காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது.

பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எடப்பாடி அருகே கல்லூரி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர் கைது…!!
Next post கத்திரிக்காயை உணவில் சேர்ப்பது நல்லதா கெட்டதா?