கனடாவில் நிலநடுக்கம்: பயந்து வீட்டை விட்டு வெளியேறிய பொது மக்கள்…!!
Read Time:1 Minute, 3 Second
கனடாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 3.0வாக பதிவாகியுள்ளது.
கனட நாட்டின் நோவா ஸ்கோடியா நகரின் டிக்பி என்ற தென்மேற்கு பகுதியில் சுமார் 42 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிச்டர் அளவுகோளில் இது 3.0 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இதனால் பெரிதும் அச்சமடைந்த மக்கள் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேறி உள்ளதாக கனடிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2015ஆம் ஆண்டு நோவா ஸ்கோடியா மாகாணத்தில் 3.8 ரிக்டர் அளவிலும், கடந்த ஆண்டு ஜுன் மாதமளவில் 3.2 ரிச்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating