நள்ளிரவில் நிகழ்ந்த தீ விபத்து: குழந்தைகள் உள்பட நால்வர் பலி…!!
கனடா நாட்டில் நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Port Colborne என்ற நகரில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் வசித்து வந்த குடும்பம் ஒன்று எதிர்வரும் கிறித்துவ பண்டிகையை கொண்டாட உற்சாகமாக ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.
இந்த குடும்பத்தில் 37 வயதான தாயார், இவருடைய 2 மற்றும் 15 வயதுடைய பிள்ளைகள் மற்றும் அவருடைய 83 வயதான பாட்டி ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 1 மணியளவில் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வீடு கொளுந்து விட்டு எரிந்ததை பார்த்த சிலர் அலறியடித்து உதவிக்கு ஆட்களை திரட்டியுள்ளனர்.
ஆனால், துரதிஷ்டவசமாக வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் தப்பிக்க முடியாமல் உள்ளேயே சிக்கியுள்ளனர்.
எனினும், வீட்டில் இருந்த தந்தை கடும் போராட்டத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறி தப்பியுள்ளார்.
வீடு எரிவதையும், தன்னுடைய மனைவியும் குழந்தைகளும் உள்ளே சிக்கியுள்ளதையும் கண்ட அவர் சாலையில் விழுந்து அழுதுள்ளார்.
சில நிமிடங்களுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்துச் சென்று தீயை கட்டுப்படுத்தினர். எனினும், இவ்விபத்தில் தாயார், இரண்டு பிள்ளைகள் மற்றும் பாட்டி ஆகிய நால்வரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating