இந்த வீடியோவை பார்த்தால் உங்க கண்ணை நீங்களே நம்ப மாட்டீங்க…!! வீடியோ
ஆற்றிலோ, ஏரியிலோ அல்லது வேறு எதாவது நீர் நிலையிலோ படகில் செல்லும் போது அலைகள் சீற்ற ஆபத்து ஏற்ப்பட்டால் படகு கவிழாமல் தப்பிக்க ஆலிவ் ஆயில் எண்ணெய் இருந்தால் போதும் என இயற்பியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டறிந்து அதை வீடியோவாக இணையத்தில் விட்டுள்ளார்.
கேம்பிரிட்ஜ் ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் இயற்பியல் பிரிவில் பணி புரியும் Greg Kestin என்னும் ஆராய்ச்சியாளர் கூறுகையில், படகில் ஏரி, ஆறு போன்ற நீர் நிலையில் போய் கொண்டிருக்கும் போது தண்ணீர் அலையானது அதிகமாகி, படகு ஆடினால் ஆலிவ் ஆயிலை எடுத்து கொஞ்சம் ஊற்றினால், அந்த எண்ணெய் படகை சுற்றி பரவி அந்த அலையானது அடங்கி விடும்.
இது எப்படி என அவர் விளக்குகையில், எண்ணெயில் உள்ள மூலகூறுகள் இரட்டை தன்மை வாய்ந்ததாகும். அதன் ஒரு தன்மை தண்ணீரின் அளவை குறைக்கவும், மற்றொரு தன்மை படகு கவிழ்வதை முறியடிக்கவும் உதவுகிறது.
அதாவது, தண்ணீருடன் ஆலிவ் ஆயில் கலப்பதால் அதன் மூலகூறுகள் அதை கெட்டியாக்கும். அதனால் தண்ணீர் அலை வீரியம் குறையும். பொதுவாக காற்று அதிகமானால் தான் தண்ணீரில் அலை அதிகம் எழும்பும். இந்த ஆலிவ் ஆயில் ஊற்றுவதால் காற்று வேகமாக அடித்தாலும் அது ஊற்றிய இடத்தில் மட்டும் அலைகள் எழும்பாது.
எண்ணெய் தன்மை அதை அப்படியே அமுக்கி விடும் என அவர் கூறியுள்ளார். இந்த முறையை 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, அமெரிக்க நாடு உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவராக கருதப்படும் Benjamin Franklin அப்போதே பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating