ஜோலார்பேட்டை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…!!
Read Time:1 Minute, 15 Second
ஜோலார்பேட்டை அருகே உள்ள கவுண்டப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி செண்பகம் தம்பதிக்கு கோகிலா (வயது 6) என்ற மகள் தனுஷ் (8), கமல் (5) என்ற மகன்கள் உள்ளனர்.
இவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று பள்ளிக்கு சென்று திரும்பி வீட்டுக்கு வந்த தனுஷ், கமல் அருகில் உள்ள செங்கல் சூளை பகுதியில் விளையாடினர். அப்போது அங்குள்ள குட்டையில் மூழ்கி இறந்தனர்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களை தேடினர் இரவு சிறுவர்கள் 2 பேரும் குட்டையில் பிணமாக மிதந்தனர்.
ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating